ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)

விற்பனைகள்: 1800-209-0144| சேவை: 1800-209-5858 சேவை சாட்: +91 75072 45858

இங்கிலீஷ்

Claim Assistance
Get In Touch
FAQs on PMFBY
ஜூன் 10, 2021

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பிஎம்எஃப்பிஒய்) பற்றிய கேள்விகள்

 1. பிஎம்எஃப்பிஒய் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என்ன?

விவசாயிகளிடையே நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டம் இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

  • பரந்த பேரழிவுகள், அவ்வப்போது ஏற்படும் பேரழிவுகள், அறுவடைக்கு பிந்தைய இழப்பு போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால் விவசாயிகளுக்கு ஏதேனும் நிதி பின்னடைவு ஏற்பட்டால் அவர்களுக்கு ஆதரவு வழங்குதல்.
  • இந்த திட்டம் விவசாயத்தின் அனைத்து நிலைகளிலும் விவசாயிகளுக்கு நன்மைகளை வழங்குகிறது, அதாவது விதைப்பு முதல் அறுவடைக்கு பிந்தைய நடைமுறைகள் வரை.
  • இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதி ஆதரவு விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் மற்றும் அவர்களின் முதலீடு இப்போது காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயத்தைத் தொடர ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தை தொடங்குவதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று விவசாயிகளை புதிய விவசாய நடைமுறைகளை ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத்த ஊக்குவிப்பதாகும்.

பல்வகைப்படுத்தப்பட்ட பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்த விவசாயிகளிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியையும் இது ஊக்குவிக்கிறது.

2. இந்த திட்டத்திற்கு எந்தெந்த விவசாயிகள் தகுதி பெறுவார்கள்?

பிஎம்எஃப்பிஒய் மற்றும் ஆர்டபிள்யூபிசிஐஎஸ் திட்டத்தின் கீழ், கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் இருவரும் காப்பீடு செய்யப்படலாம்.

3. யாரெல்லாம் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள்?

அறிவிக்கப்பட்ட பயிர்களின் பருவகால விவசாய நடவடிக்கைகளுக்காக (எஸ்ஏஓ) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிதி நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெற்ற அனைத்து விவசாயிகளும் கடன் பெற்றவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். அதேசமயம், எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்திலிருந்தும் கடன் பெறாத விவசாயிகள் கடன் அல்லாத விவசாயிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

4. இந்த திட்டங்களின் கீழ் எந்த பயிர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன?

இந்த திட்டத்தின் கீழ் பின்வரும் பயிர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன:

  • உணவு பயிர்கள் (தானியங்கள், சிறுதானியங்கள், பருப்புகள்)
  • எண்ணெய் விதைகள்
  • வருடாந்திர வணிக/ வருடாந்திர தோட்டக்கலை பயிர்கள்
5. பிஎம்எஃப்பிஒய் திட்டத்தின் வெவ்வேறு கூறுகள் யாவை?

இந்த பிஎம்எஃப்பிஒய் திட்டத்தில் இரண்டு கூறுகள் உள்ளன, இது விவசாயிகளுக்கு (கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத) காப்பீடு வழங்குகிறது:

  • கட்டாயமானவை: அனைத்து கடன் பெற்ற விவசாயிகளும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கட்டாயமாக காப்பீடு செய்யப்பட வேண்டும்.
  • தன்னார்வமானவை: இது கடன்-பெறாத விவசாயிகளுக்கு விருப்பமானது. இதனை தேர்வு செய்வதற்கான செயல்முறை:
    1. இந்த நன்மையைப் பெற விவசாயிகள் குறிப்பிடப்பட்ட கட்ஆஃப் தேதிக்கு முன்னர் காப்பீட்டு நிறுவனத்தின் அருகிலுள்ள வங்கி / அங்கீகரிக்கப்பட்ட சேனல் பங்குதாரரை அணுக வேண்டும்.
    2. அவர்கள் முன்மொழிவு படிவத்தை பூர்த்தி செய்து அவர்களின் சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நில அடையாள எண்ணின் விவரங்களை அனைத்து தேவையான ஆவணங்களுடன் வழங்க வேண்டும்.
    3. விவசாயிகள் இந்த படிவத்தை பிரீமியம் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தின் வங்கி/ அங்கீகரிக்கப்பட்ட சேனல் பங்குதாரரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 6. விவசாயிகள் தங்கள் பயிர்களை எங்கு காப்பீடு செய்யலாம்?

கடன் பெற்ற விவசாயிகள் தங்கள் பயிர் கடனை பெறும் வங்கிகள் மூலம் கட்டாயமாக காப்பீடு செய்யப்படுகிறார்கள். கடன் பெறாத விவசாயிகள் சிஎஸ்சி மையங்கள் அல்லது காப்பீட்டு நிறுவனங்களின் அலுவலகங்களை அணுகுவதன் மூலம் தங்கள் பயிரை காப்பீடு செய்யலாம். விவசாயிகள் வங்கிகள் அல்லது முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் புரோக்கர்களை அணுகலாம், அல்லது விவசாயி போர்ட்டலில் ஆன்லைனில் அணுகலாம்.

7. இந்த திட்டத்தின் கீழ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

உண்மையான பிரீமியம் விகிதம் (ஏபிஆர்) காப்பீடு செய்யப்பட்ட தொகை (எஸ்ஐ) மீது கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் செலுத்த வேண்டிய அதிகபட்ச பிரீமியம் விகிதம் பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகிறது:

பருவம் பயிர்கள் விவசாயி செலுத்த வேண்டிய அதிகபட்ச காப்பீட்டு கட்டணங்கள்
சம்பா அனைத்து உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் விதை பயிர்கள் எஸ்ஐ-யின் 2%
குறுவை அனைத்து உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் விதை பயிர்கள் எஸ்ஐ-யின் 1.5%
சம்பா மற்றும் குறுவை வருடாந்திர வணிக / வருடாந்திர தோட்டக்கலை பயிர்கள் வற்றாத தோட்டக்கலை பயிர்கள் (பைலட் அடிப்படை) எஸ்ஐ-யின் 5%
  8. ஒரு தனிநபர் விவசாயிக்கான காப்பீட்டுத் தொகை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

இந்த திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் விவசாயிக்கான காப்பீடு செய்யப்பட்ட தொகையை கணக்கிடுவதற்கான ஃபார்முலா:

 காப்பீடு செய்யப்பட்ட தொகை = ஒரு ஹெக்டேருக்கான நிதி அளவு * விவசாயிகளால் அறிவிக்கப்பட்ட பயிரின் பரப்பளவு

9. பிஎம்எஃப்பிஒய் திட்டத்தின் கீழ் எந்தெந்த ஆபத்துகள் உள்ளடங்கும்?

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் பின்வரும் ஆபத்துகளை உள்ளடக்குகிறது:

  • தடுக்கப்பட்ட விதைப்பு/நடவு அபாயம்
  • வளர்ச்சி நிலையில் இருக்கும் பயிர் (விதைப்பு முதல் அறுவடை வரை)
  • அறுவடைக்கு பிறகு ஏற்படும் இழப்புகள்
  • இயற்கை ரீதியான ஆபத்து
10. பரந்த பேரழிவு ஏற்பட்டால் கோரல் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பரந்த பேரழிவு ஏற்பட்டால், பரப்பளவு அடிப்படையில் குறைந்தபட்ச மகசூலுடன் (டிஒய்) ஒப்பிடுகையில் காப்பீடு செய்யப்பட்ட பயிரின் விளைச்சலின் பற்றாக்குறைக்கு விவசாயி காப்பீடு பெறுகிறார். கோரல் இவ்வாறு கணக்கிடப்படுகிறது:

(குறைந்தபட்ச மகசூல் - உண்மையான மகசூல்) ------------------------------------------ * உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச மகசூல்

 11. காப்பீட்டு நிறுவனத்திடம் இயற்கை ரீதியான இழப்புகளைப் பற்றி விவசாயிகள் எவ்வாறு தெரிவிப்பது?

 விவசாயிகள் இழப்பின் விவரங்களை எங்களுக்கு அல்லது சம்பந்தப்பட்ட வங்கி அல்லது உள்ளூர் விவசாயத் துறை/மாவட்ட அதிகாரிகளுக்கு 72 மணிநேரங்களுக்குள் தெரிவிக்கலாம். டோல்-ஃப்ரீ எண் 1800-209-5959 ஐ பயன்படுத்தி அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

 12. விதைப்பதை தடுப்பதன் காரணமாக ஏற்படும் இழப்புகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

தடுக்கப்பட்ட விதைப்பு காரணமாக இழப்பு ஏற்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட விவசாயி காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பரந்த பேரழிவாக இருக்கும் மற்றும் பரப்பளவு அடிப்படையில் மதிப்பீடு இருக்கும். வானிலை நிலைமைகள் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிரை விதைக்க முடியாத போது இந்த நன்மை தொடங்கப்படுகிறது.

 13. பிரதான் மந்திரி பீமா ஃபசல் யோஜனாவில் பதிவு செய்வதற்கான சரியான நேரம் எது?

ஒவ்வொரு மாநிலத்தின் மாநில அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பதிவுகளும் கட்ஆஃப் தேதிக்கு முன்னர் செய்யப்பட வேண்டும். மேலும், வங்கி அல்லது இடைத்தரகர் மூலம் முறையாக செலுத்தப்பட்ட பிரீமியத்தில் விவசாயி தனது பங்கை கட்ஆஃப் தேதிக்கு முன் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். கட்-ஆஃப் தேதிக்குப் பிறகு பிரீமியத்தை பதிவு செய்வதில் மற்றும் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால், காப்பீட்டை நிராகரிக்கும் உரிமையை காப்பீட்டு நிறுவனம் கொண்டுள்ளது.

 14. பிஎம்எஃப்பிஒய் திட்டத்தின் கீழ் அறுவடைக்கு பிறகு ஏற்படும் எந்தெந்த இழப்பிற்கு காப்பீடு வழங்கப்படும்?

அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் அறுவடை செய்ததிலிருந்து 14 நாட்கள் வரை உலர்த்துவதற்காக "வெட்டப்பட்ட மற்றும் பரப்பப்பட்ட" நிலையில் வயல்களில் வைக்கப்பட்டிருக்கும் போது, ஆலங்கட்டி மழை, சூறாவளி, புயல் மழை மற்றும் பருவகால மழை தவறுதல் காரணமாக ஏற்படும் தனிநபர் நிலத்தில்/பண்ணையில் அறுவடைக்கு பிந்தைய மகசூல் இழப்பு மதிப்பிடப்படுகிறது.

 15. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான வரி சலுகைகள் யாவை?

இந்த திட்டம் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? இதை மதிப்பிடவும்

சராசரி மதிப்பீடு 5 / 5 வாக்கு எண்ணிக்கை: 18

இதுவரை மதிப்பீடு எதுவும் இல்லை! இந்த பதிவை மதிப்பிடும் முதல் நபராக இருங்கள்.

இந்த கட்டுரையை விரும்புகிறீர்களா?? உங்கள் நண்பர்களுடன் இதனை பகிருங்கள்!

உங்கள் சிந்தனைகளை பகிருங்கள். கீழே ஒரு கருத்தை இடுங்கள்!

பதிலளிக்கவும்

உங்கள் இமெயில் முகவரி வெளியிடப்படாது. அனைத்து இடங்களையும் நிரப்புக